...
Wednesday, 27 January 2016
Monday, 21 July 2014
வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு வேம்படி சுடலை ஆண்டவர்
Posted on 07:16 by இசக்கி
வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு
வேம்படி சுடலை ஆண்டவர்
சாத்தான்குளத்திலிருந்து நானும் எனது நண்பரும் ஏதேனும் செய்தி சேகரிக்க கிளம்பி பேய்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தோம். தேனீர் அருந்தி சிறிது இளைப்பாரி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். வெயில்வேறு வாட்டி எடுத்தது. பேய்குளத்தில் இருந்து செல்லும் போது பழனியப்பபுரம் கடந்து சின்னமாடன் குடியிருப்பு செல்லும் மணல் சாலையில பயணித்த போது ஆள் நடமாட்டமே அங்கு காணவில்லை.
அந்த...
ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா
Posted on 07:11 by இசக்கி

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில்
ஆடி அமாவாசை திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வீற்றிருக்கும் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் இன்று ஆடி தை அமாவாசை திருவிழா மிகசிறப்பாக நடக்கிறது. சேர்மன் அருணாசல சுவாமி கோவிலுக்கு கிழக்கே திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், தெற்கே குலசை முத்தாரம்மன் திருக்கோவிலும், குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் திருக்கோவிலும், மேலுப்புதுக்குடி அய்யனார்திருக்கோவிலும்,...
Thursday, 5 December 2013

மருந்தீஸ்வர்
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில்...
Friday, 17 May 2013
ஆத்தி சுவாமி வரலாறு
Posted on 04:07 by இசக்கி

ஆத்தி சுவாமி வரலாறு
முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான், ஒரு நாள் பெரியசுவாமிகள் கோயிலுக்கு சென்றார், அங்கே பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது கையை வைத்தார் உடனே திறந்து கொண்டது, உள்ளே சென்ற சுவாமிகள் பூஜைகள் செய்துவ்ட்டு திரும்பினார், பிறகு கதவு தானே தாள் இட்டுக்கொண்டது, வழக்கம்...
Sunday, 10 March 2013
எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்
Posted on 23:55 by இசக்கி

எஸ்.எம்.எஸ். மூலம்
செல்போனை சார்ஜ் செய்யலாம்
நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை...
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்
Posted on 23:29 by இசக்கி

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள்
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும்...
Subscribe to:
Posts (Atom)