Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Tuesday, 22 January 2013





திகைக்க வைத்த புத்தக கண்காட்சி....

நான் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இதுவரை புத்தக கண்காட்சியை பார்த்தது இல்லை. இந்த ஆண்டு எப்படியும் புத்தக கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கடந்த சனிக்கிழமை புத்தக கண்காட்சியை காண நானும் என் நண்பனும் சென்றோம். நுழைவாயிலேயே இரண்டு காவலர்கள் இங்கு வண்டிய நிருத்தாதே உள்ளே போயிரு... உள்ளே போயிரு... என்று வேகமாக கத்திக்கொண்டிருந்தார். என்னடா போலீஸ்காரர் இவ்வளவு கிராக்கி பண்ணிக்கிறார். அவ்வளவு கூட்டமா வந்து விடப்போகிறது என்று மனதில் நினைக்கும் முன்பே வண்டி நுழைவாயிலை தாண்டி உள்ளே போனதும்....  நான் முதல் முதலில் வண்டலூர் மிருககாட்சிக்கு சென்ற நினைவுதான் வந்தது. இரு புறமும் மரங்கள் நீண்ட சாலை.... வண்டலூரில் அப்படித்தான் இருக்கும் நீண்ட சாலை இடை இடையே ஏங்காவது ஒரு மிருகத்தை கூண்டில் அடைத்து வைத்திருப்பார்கள். அய்யயோ... வந்து மாட்டிக்கிட்டோம் போல என்று மனது நினைத்துக்முடிக்கும் முன் வண்டிக்கு டோக்கன் வாங்கி கொள்ளுங்கள் என்று ஒருவர் கூவினார்... அலுவலகம் அதற்கு கூட செலவு வைக்காமல் பாஸ் தந்திருந்தது. வண்டியை எங்கே விடுவது என்று நானும் நண்பனும் திகைத்து விட்டோம், அவ்வளவு வண்டிகள்... வரும் எளிதாக எடுப்பதற்காக ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். கொஞ்ச தூரம் நடந்துதான் செல்ல வேண்டியது இருந்து. நடக்க நடக்க அதிக ஆர்வம் எழ துவங்கியது.  செல்லும் நெடுவெல்லாம் வண்டிகள், பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்கள்... குழந்தைகள் கூட்டி வந்த பெற்றோர்கள். ஊன்றுகோழை ஊன்றியபடி முதியவர்கள் பலர் ஆங்காங்கே தென்பட்டனர். 


டிக்கெட் எடுக்கும் கவுண்டருக்கு அருகில் செல்லும் போது விகடன் குழுமத்தின் விளம்பரங்கள் மிரளவைத்தது. நாணய விகடன் கட்அவுட்களை கொண்டே டிக்கெட் விநியோகிக்கும் கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் டிக்கெட் எடுக்கும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளவில்லை, ஏன்என்றால் அந்த செலவை கூட அலுவலகம் எங்களுக்கு  வைக்க வில்லை. அலுவலகத்தில் இலவச நுழைவு சீட்டு கொடுத்திருந்தார்கள். புத்தக கண்காட்சி அரங்கிற்குள் நுழையும்போது இரண்டு மூன்று பேர் வழியில் நின்று கொண்டு பொதுமக்கள் எடுத்து வந்திருந்த நுழைவு சீட்டிலே ஒரு பகுதி பரிசுக்காக அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை கிழித்து ஒரு பெரிய அட்டை பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டி நுழைந்தேன்...





 ஒரு நிமிடம் திகைத்து விட்டேன். உள்ளே நின்ற கூட்டத்தைப்பார்த்து. அவ்வளவு கூட்டம். அரங்கு அரங்குகளாக ஒவ்வொரு பதிப்பங்களும் தன் படைப்புகளை காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வைத்திருப்பதை பார்த்து மிரண்டு விட்டேன். எத்தனை எத்தனை தலைவர்கள், அவர்களை பற்றி வாழ்க்கை குறிப்புகள். மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகங்கள், அடிச்சுவடு புத்தகங்கள், தன்னை தானே புழந்து எழுதிக்கொண்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான் நிறைய எண் கண்ணில் பட்டது. என்னால் நினைத்திருக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் அங்கு அரங்குகள் அமைத்திருந்த பதிபகத்தார் பொக்கிஷமாக பாது காத்திருந்ததை கண்டு மிகவும் வியந்தேன்


 இதை எல்லாம் தாண்டி நான் பார்த்த அரங்குகளில் எல்லாம் வியக்க வைத்த ஒரு புத்தகம் தான் விகடன் இயர்புக் 2013. அதில் என்ன இருக்கிறது என்று நானும் அந்த புத்தகத்தை எடுத்து பக்கங்களை திருப்பி பார்த்தேன். வாழ்வில் நடந்து முடிந்த காலத்தையும், வாழ்ந்து முடிந்த தலைவர்களையும்,  விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு, வருகிற காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் இப்படி அனைத்து துறைகளை பற்றியும் மிக துள்ளியமாக  தற்போது நம் கண்முன்னாள் நடந்ததுபோல், நடந்து கொண்டிருப்பதை  சுட்டிகாட்டிய விகடன் பிரசுரத்தின் படைப்புகளின் பொக்கிஷமான விகடன் இயர்புக் 2013 புத்தகத்தை எல்லா புத்தக அரங்குகளிலும்  என் கண்களால் காண முடிந்தது.  
731 புத்தக அரங்குகள் மொத்தம் இருக்கிறது என்று வெளியே வரும் போது பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எத்தனை முறை எண்ணிப்பார்தாலும் அங்கு அமைந்திருக்கும் அரங்குகளை எண்ணி முடிக்க முடியாது.
ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த நிமிடத்தில் உலகிற்கே தெரிந்துவிடும் அளவிற்கு மிடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் போதிலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே கணினியில் இணையதளம் மூலம் உலகத்தையே ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்த போதிலும்.... சிறிது கவனிக்காமல் வைத்திருந்தால் செல்லரித்துப்போகும் புத்தகங்களின் அருமையை அன்றுதான் உணர்ந்தேன். 
இந்த புத்தக பொக்கிஷங்களை அழியாமல் காத்து வரும் அனைத்து புத்தக பதிப்பாளர்களும் அழியாத பொக்கிஷம்தான்....


Wednesday, 19 December 2012

நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்:

 அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் 

இடம் பெறாது- மத்திய மந்திரி உறுதி



நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படும் என்று நாடார்கள் அமைப்புகளிடம் மத்திய மந்திரி பல்லம் ராஜு உறுதி அளித்தார். சி.பி.எஸ்.இ. 9-வது வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த பகுதியை நீக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற தி.மு.க உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்கக் கோரி அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழுவும் பெரும் போராட்டம் அறிவித்திருந்தது. 

சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்குவதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ கூறியதை தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த  பாடப்பகுதி நீக்கப்பட்டதாப என்பதை கண்டறியவும் மத்திய மந்திரி மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழு உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. தலைமையில் நேற்று மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்தனர். அவர்கள், நாடார் சமுதாயம் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலால் ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தின் உணர்வுகளும் புண்பட்டு இருப்பதாகவும், இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது மந்திரி பல்லம் ராஜு கூறியதாவது:- 

இந்த பிரச்சினை பற்றி நான் முழுமையாக அறிவேன். பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து ஆராய கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளேன். இந்த குழுவின் பரிந்துரையின்படி இந்த பாடத்திட்டத்தை நீக்க நடவடிக்கை  எடுப்பேன். அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் இந்த பகுதி கண்டிப்பாக இடம் பெறாது. இதுதொடர்பான போராட்டங்களை தங்கள் சமுதாயத்தின்  சார்பில் நடத்த வேண்டாம். 

இவ்வாறு மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்தார். 

மந்திரியை சந்தித்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை நாடார் தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் வி.டி.பத்ம நாபன், செயலாளர் ஜி.டி. முருகேசன், தமிழ்நாடு சத் திரிய நாடார் சமுதாய இயக்க கூடுதல் பொதுச்செயலாளர் எம்.மாரித்தங்கம், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.