Monday 21 July 2014

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில்
ஆடி அமாவாசை திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வீற்றிருக்கும் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் இன்று ஆடி தை அமாவாசை திருவிழா மிகசிறப்பாக நடக்கிறது. சேர்மன் அருணாசல சுவாமி கோவிலுக்கு கிழக்கே திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், தெற்கே குலசை முத்தாரம்மன் திருக்கோவிலும், குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் திருக்கோவிலும், மேலுப்புதுக்குடி அய்யனார்திருக்கோவிலும், நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோவிலும், வரண்டியவேல் கிராமம் கசங்காத்த பெருமாள் திருக்கோவிலும் வடக்கே சிறுத்தொண்ட நல்லூர் முத்துமாலைஅம்மன் திருக்கோவிலும் அதன் அருகே உமரிக்காடு முத்தாரம்மன் திருக்கோவிலும், மேற்கு கடலில் பாதி என்று அழைக்கப்படும் கடம்பாகுளம் அருகில் புன்னை நகர் புதல்வர் உருவாக்கிய தமிழகச் சுற்றுலா துறைத்தலங்களில் ஒன்றாக விளங்கும் வனத்திருப்பதி சுவாமி திருக்கோவிலும் சிறப்பாக அமையப்பெற்றது.
திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி கிராமத் தில் ராமசாமி நாடார், சிவ ணைந்த அம்மை யார் அவர்களுக்கு சேர்மன்  அருணா சல சுவாமி தவத் திரு குமாரனாக  அவதரித்தார். அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி பயின்றார். அங்கு வாழ்ந்து வந்தார். கடவுள் அருள்பெற்ற தனது குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சலக நோய்களையும் குணப்படுத்தினார்.
பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப் பணியாற்றினார்.
இப்பணியை சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற பெயர் பெற்றார். சேர்மன் சுவாமி ஒருநாள் தன் சகோதரரை அருகில் அமர்த்தி பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில் (கலக வருடம் 1083&ம் (1908) ஆண்டு ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம் தேதி)  செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று கூறினார்.
ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின்  அருகில் என்னை சமாது செய்ய வேண்டும்.
சமாதுகுழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த நேரத்தில் மேலே கருடன் மூன்று நேரம் வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாது குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து மூடிவிடுங்கள் என்று கூறினார்.
சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது வயது 28 திருமணம் ஆகாமலேயே சமாதி ஆனார். அவர் சொன்ன வாக்கின்படியே நடந்தது. அன்று முதல் வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் திரு ஆலின் ஓரமாக புனித சமாது கொண்டு கருணை உருவமாக கற்பக கனியாக, ஜோதியாக கார்த்திடும் கற்பகத்தருவாக தன்னை  வேண்டும் அன்பர்க-ளுக்கு மண்ணும், தண்ணீரும் தன் திருமருந்தாக கொடுத்து சலக நோய்களையும் குணப்படுத்தி வருகிறார்.
அருணாசல சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஈரஉடையோடு வலம் வந்து கொண்டு வரும் புனித நீரை லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணால் செய்த லிங்கம் கரைந்து விடுமென்று கருதி கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும் என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால் மண்ணால் செய்து வைத்த லிங்கம் புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டு வருவதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இதனால் இன்று மண்லிங்கமே மூலஸ்தானமாக விளங்குகிறது. இது இயற்கையாக அமைந்த சிற்பமாகும். கோவில் நிர்வாஸ்தர் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிநாடார் அவர்கள் தை அமாவாசை திருநாளான இன்று சுவாமியை வணங்கி உலகின் தலைசிறந்த மக்களாக வாழுங்கள் என்று அழைக் கிறார்.  பக்தர்களாகிய நாமும் ஆடி அமாவாசை திருநாளில் சேர்மன் அருணாசல சுவாமியை வணங்கி உலகின் தலை சிறந்த மக்களாக வாழ்வோம்.

0 comments:

Post a Comment