பிலிப்பைன்ஸ் போபா சூறாவளி பாதிப்பில் இறந்தோர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியது
பிலிப்பைன்சின் தெற்குபகுதியில் மிண்டானோவ் நகரில் கடந்த 4-ம் தேதி அன்று
போபா தைபூன் என்ற கடுமையான சூறாவளி தாக்கியது. 260 கிலோமீட்டர் வேகத்தில்
கடுமையான மழையுடன் தாக்கிய இந்த சூறா வளிக்கு இதுவரை அங்கு 1020
கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 850 பேரை காணவில்லை.
புயல் தாக்குவதற்கு முன் கடலுக்குள் சென்ற பெரும்பாலான மீனவர்கள் என்ன
ஆனார்கள் என்றே தெரியவில்லை. முறிந்து கிடக்கும் மரங்கள் மற்றும் வீடுகளின்
இடிபாடுகளிலிருந்து அதிகமான சடலங்கள் எடுக்கப்பட்டு வருவதால் சாவு
எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகளை இழந்து அகதிகளாக உள்ள
27,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது.
0 comments:
Post a Comment